×

நாகையில் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தவர்கள் கட்சிக்கு திடீர் முழுக்கு

நாகப்பட்டினம், ஏப். 2: நாகப்பட்டினத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இஸ்லாமியர்கள் அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். நாகப்பட்டினம் அவுரி திடலில் பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அண்ணாமலை கடந்த 30ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த அப்துல்சமது சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக கடந்த 31ம் தேதி அறிவித்துள்ளார். ஒட்டு மொத்த சமுதாயம், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனிடம் கடிதம் வாயிலாக கூறியுள்ளார். அப்துல்சமது அதிமுகவில் இருந்து, அமமுக விற்கும், அமமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறி தற்போது பாஜகவில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

The post நாகையில் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தவர்கள் கட்சிக்கு திடீர் முழுக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Nagai ,Nagapattinam ,president ,Muslims ,Ramesh ,Auri ,Thidal ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை...